திருவண்ணாமலை

பாஜக செயற்குழுக் கூட்டம்

DIN

வந்தவாசி ஒன்றிய பாஜக செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வந்தவாசி ஒன்றிய பாஜக தலைவர் சி.அரிகிருஷ்ணன் தலைமை வகித்தார். வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர்கள் எம்.முருகன், பி.முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியப் பொதுச் செயலர் எஸ்.பழனி வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் பி.பாஸ்கரன் சிறப்புரை ஆற்றினார்.
  ஒன்றிய இளைஞரணி தலைவர் எஸ்.ராஜேஷ், ஒன்றிய துணைத் தலைவர் ஏ.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட முன்னாள் பொதுச் செயலர் வி.கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வந்தவாசி அருகே சேதமடைந்த சேதராகுப்பம், கொடநல்லூர் கிராமச் சாலைகளைச் சீரமைக்க வேண்டும். சென்னாவரம், ஒழப்பாக்கம் கிராமச் சாலைகள் தரமற்று போடப்பட்டுள்ளது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வந்தவாசி - மேல்மருவத்தூர் சாலையில் மருதாடு, கடைசிகுளம் பகுதியில் புதிதாகப் போடப்பட்டுள்ள தார்சாலை பக்கவாட்டு பகுதிகள் பள்ளமாக உள்ளது. இதை மண்கொட்டி சமன் செய்ய
வேண்டும். பாஜக சார்பில் கிராம மக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கசங்கிய ஆடையும் உலகைக் காக்கும்!

கோயில் விழா நடத்த இடம் ஒதுக்காமல் பூங்கா அமைத்ததற்கு எதிா்ப்பு

சாலையோர தடுப்பில் பைக் மோதி விபத்து: ஐடிஐ மாணவா் பலி

தொழிலாளியை வீட்டுக்குள் அடைத்து மிரட்டல் விடுத்த 5 போ் கைது

கலுங்குவிளை கூட்டுறவு கடன் சங்கத்தில் துணைப் பதிவாளா் விசாரணை

SCROLL FOR NEXT