திருவண்ணாமலை

டெங்குவை கட்டுப்படுத்தாதற்கு எதிர்ப்பு: விசிக சார்பில் விழிப்புணர்வுப் பேரணி

DIN

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, ஆரணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் புதன்கிழமை இரு சக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி நடத்தினர்.
பேரணிக்கு ஆரணி தொகுதிச் செயலர் ந.முத்து தலைமை வகித்தார். இதையொட்டி, ஆரணி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 50 இரு சக்கர வாகனங்களில் போளூர் வழியாக  திருவண்ணாமலை வரை பேரணியாகச் சென்றனர். இதில், தொகுதி துணைச் செயலர் செல்வக்குமார், மாவட்டப் பொருளாளர் ஜெய்சங்கர், நகர துணைச் செயலர் சண்முகம், நிர்வாகிகள் தயாளன், திருமால், ஜோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT