திருவண்ணாமலை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவினர் தர்னா

DIN

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக் கோரி, திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டுப் போராட்டக் குழுவினர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அண்ணா சிலை எதிரே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு ஜல்லிக்கட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ராகவன் தலைமை வகித்தார். இளந்தளிர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆர்.டி.பிரகாஷ், தர்னா போராட்டத்தைத் தொடக்கி வைத்தார்.
போராட்டத்தின்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும். திருவண்ணாமலையை அடுத்த கவுத்திமலை, வேடியப்பன் மலைகளில் தனியார் நிறுவனம் மூலம் இரும்புத் தாது வெட்டி எடுக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதில், ஜல்லிக்கட்டு போராட்டக்குழு இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT