திருவண்ணாமலை

கருணாநிதி நினைவஞ்சலி ஊர்வலம்

DIN

திமுக தலைவர் கருணாநிதி காலமானதையடுத்து, அவருக்கு நினைவஞ்சலி ஊர்வலம் திமுக மற்றும் பல்வேறு கட்சிகள் சார்பில், வந்தவாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஊர்வலத்துக்கு திமுக மாவட்ட அவைத்தலைவர் கே.ஆர்.சீதாபதி தலைமை வகித்தார். வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார், திமுக மாவட்ட துணைச் செயலர் எம்.எஸ்.தரணிவேந்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
திமுக ஒன்றியச் செயலர்கள் டி.டி.ராதா, ப.இளங்கோவன், எஸ்.சுரேஷ்கமல், ஆர்.நந்தகோபால், நகரச் செயலர் கோட்டை பாபு, பொதுக்குழு உறுப்பினர்கள் வி.ராமு, அப்சர் லியாகத், இளைஞரணி அமைப்பாளர்கள் சி.ஆர்.பெருமாள், ஈ.மணிகண்டன், டி.பாலாஜி மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் உள்ள அண்ணா சிலையிலிருந்து தொடங்கிய ஊர்வலம், திண்டிவனம் சாலை, தேரடி, பஜார் வீதி வழியாக பழைய பேருந்து நிலையம் சென்றடைந்தது. அங்கு கருணாநிதியின் உருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT