திருவண்ணாமலை

கல்லூரி மாணவர் தற்கொலை

DIN

கீழ்பென்னாத்தூர் அருகே கல்லூரித் தேர்வை சரியாக எழுதாத மாணவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த செவரப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த அல்லி மகன் விக்ரம் (18). திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி 2-ஆம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியில் நடைபெற்ற தேர்வை சரியாக எழுதாததால் கடந்த சில தினங்களாக விக்ரம் மனமுடைந்து காணப்பட்டாராம்.
இந்த நிலையில், நிலத்துக்குச் சென்று படித்துவிட்டு வருவதாக கூறிவிட்டுச் சென்ற அவர், மீண்டும் வீடு திரும்பவில்லையாம்.
சந்தேகமடைந்த பெற்றோர் சனிக்கிழமை நிலத்துக்குச் சென்று தேடிப் பார்த்தனராம். அப்போது, விக்ரம் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாராம். இதைக் கவனித்த உறவினர்கள் அவரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், அங்கு விக்ரம் உயிரிழந்தார்.
இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT