அல்லியந்தல் பட்டீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
பெரணமல்லூர் அருகே அல்லியந்தல் கிராமத்தில் அமைந்துள்ள பட்டீஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பெரணமல்லூர் அருகே அல்லியந்தல் கிராமத்தில் அமைந்துள்ள பட்டீஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக, இந்தக் கோயிலில் கோ பூஜை, கணபதி ஹோமம், வேள்விப் பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, புனித நீரை சிவாச்சாரியர்கள் கோபுர கலத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
ஏற்பாடுகளை விழாக் குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.