சேத்துப்பட்டு பள்ளியில் உலகத் தரத்துக்கு இணையான கல்வி முறை தொடக்கம்
சேத்துப்பட்டு திவ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலகத் தரத்துக்கு இணையான எக்ஸ்சீட் நேரடி கல்வி முறையை தாளாளர் பா.செல்வராஜன் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
திருவண்ணாமலைசேத்துப்பட்டு பள்ளியில் உலகத் தரத்துக்கு இணையான கல்வி முறை தொடக்கம்
சேத்துப்பட்டு திவ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலகத் தரத்துக்கு இணையான எக்ஸ்சீட் நேரடி கல்வி முறையை தாளாளர் பா.செல்வராஜன் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
சேத்துப்பட்டு திவ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலகத் தரத்துக்கு இணையான எக்ஸ்சீட் நேரடி கல்வி முறையை தாளாளர் பா.செல்வராஜன் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
சேத்துப்பட்டு திவ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதிய எக்ஸ்சீட் நேரடி கல்வி முறை தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் தாளாளர் பா.செல்வராஜன் தலைமை வகித்து, எக்ஸ்சீட் நேரடி கல்வி முறையை தொடக்கி வைத்தார். துணைத் தலைவர் செந்தில்குமார், செயலர் பிரவின்குமார், முதன்மை ஒருங்கிணைப்பாளர் பிரதாபன், நிர்வாக அலுவலர் சீனிவாசராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் முரளி வரவேற்றார்.
விழாவில் தாளாளர் பா.செல்வராஜன் பேசியதாவது: மாணவர்கள் சுயமாக சிந்தித்து, உலகத்தரத்துக்கு இணையான கற்றல், கற்பித்தலில் வெற்றி பெற உலகத்தரத்தில் தலை சிறந்த நிறுவனமாகத் திகழும் எக்ஸ்சீட் நிறுவனம் மூலமாக வகுப்பறைக் கல்வியை மேலோங்கச் செய்ய பாடத் திட்ட முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் தெளிவாக புரிந்துகொள்ளவும், ஆங்கிலத்தில் தவறில்லாமல் பேசவும்,எழுதவும் முடியும். இந்தக் கல்வி முறை மூலம் பயிலும் மாணவர்கள் நம் பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து, எக்ஸ்சீட் நிறுவன மண்டலத் தலைவர் அஸ்வின் பாலா, மாணவர்களுக்கு விளக்க உரையாற்றினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.