வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் உலக தாய்மொழி தின விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவுக்கு ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் தலைமை வகித்தார். கல்வி மைய ஆசிரியர் புருஷோத்தமன் வரவேற்றார். வந்தவாசி அருவி அறக்கட்டளை அமைப்பாளர் ஏ.ஜெ.ரூபன், தாய்மொழியின் இனிமை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மேலும், பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அவர் பரிசுகளை வழங்கினார்.
விழாவில் கவிஞர் சு.அகிலன், தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர் கேசவராஜ் மற்றும் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.