தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய பேரணியில் கலந்து கொண்டோர் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து, சேத்துப்பட்டில் அந்தக் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேத்துப்பட்டு சார் - பதிவாளர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சேத்துப்பட்டு, பெரணமல்லூர் பகுதிகளைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சேகர், வெங்கடேசன், மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையினரைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தின் போது முழக்கங்களை எழுப்பினர்.