போளூரில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ,உணவுப் பாதுகாப்புப் பிரிவு சார்பில் உணவு வணிகர்களுக்கான விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமில், போளூரில் கடை வைத்துள்ள உரிமையாளர்கள் கடை நடத்தும் உரிமம் , அனுமதி பெறுவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், கடை நடத்துவோருக்கு உணவுப் பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன், போளூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெசிமாபானு ஆகியோர் கலந்துகொண்டு உரிமச் சான்று வழங்கினர் . துப்புரவு ஆய்வாளர் சோமு மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.