முகப்பு
திருவண்ணாமலை

மகாத்மா காந்தி நினைவு தினம்

வந்தவாசி பகுதி கல்லூரிகளில் மகாத்மா காந்தி நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, மாணவர்கள் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

வந்தவாசி பகுதி கல்லூரிகளில் மகாத்மா காந்தி நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, மாணவர்கள் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.
வந்தவாசி திருவள்ளுவர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு கல்லூரி நிறுவனர் ச.அருணாசலம் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். கல்லூரித் தாளாளர் பாலாமணி அருணாசலம், துணைத் தலைவர் அ.கணேஷ்குமார், இயக்குநர் பிரபாகரன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
வந்தவாசியை அடுத்த தெள்ளாறு இராஜா நந்திவர்மன் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு கல்லூரித் தலைவர் வி.முத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். கல்லூரிப் பொருளாளர் எஸ்.பழனிச்சாமி, முதல்வர் (பொறுப்பு) இரா.ஏழுமலை மற்றும் இயக்குநர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →