முகப்பு
திருவண்ணாமலை

தென்னிந்திய குங்ஃபூ போட்டி: ஆரணி மாணவர்கள் சிறப்பிடம்

தென்னிந்திய அளவிலான குங்ஃபூ போட்டியில் ஆரணி பிங்க்ஸ் பப்ளிக் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

தென்னிந்திய அளவிலான குங்ஃபூ போட்டியில் ஆரணி பிங்க்ஸ் பப்ளிக் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
2018-ஆம் ஆண்டுக்கான 3-ஆவது தென்னிந்திய அளவிலான மூவாபோரான் சாம்பியன்ஷிப் குங்ஃபூ போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில், ஆரணியை அடுத்த கஸ்தம்பாடி பிங்க்ஸ் பப்ளிக்  மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் எம்.முகிலன், வி.ஜெக
ஜீவசந்திராயன், எம்.சரண், 
டி.ஆகாஷ், பி.எஸ்.அரிகேசன், பி.கோகுலகிருஷ்ணன், ஏ.ஆர்.திலீபன், டி.ருத்ரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு தங்கப் பதக்கங்கள் பெற்றனர்.
மேலும், இதே பள்ளியைச் சேர்ந்த பி.சஞ்சய், என்.ஜெயசூர்யா, ஏ.திவாகர் ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை பெற்றனர். சாதனை படைத்த மாணவர்களையும், பயிற்சியாளர் மதன்தனசேகரையும் பள்ளியின் கூடுதல் தாளாளர் சித்ரா, நிர்வாக ஆலோசகர் கவிதா, பள்ளி முதல்வர் ஐ.ஜான்மர்லின்இன்பகுமார் ஆகியோர் பாராட்டினர்.

முழு கட்டுரையைப் படிக்க →