திருவண்ணாமலை

வேட்டவலம் பகுதியில் 500 லிட்டர்  சாரய ஊறல் அழிப்பு

DIN

வேட்டவலம் பகுதியில் மது விலக்கு அமல் பிரிவு போலீஸார் நடத்திய சோதனையில், 500 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
வேட்டவலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாராய விற்பனை அதிகரித்து வருவதாக திருவண்ணாமலை மது விலக்கு அமல் பிரிவு போலீஸாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீஸார் வியாழக்கிழமை காலை வேட்டவலம் முயல்குன்று பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்குள்ள மறைவிடத்தில் 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தொட்டியில் இருந்த சாராய ஊறலை போலீஸார் அழித்தனர். இந்த சாராய ஊறலை தயார் செய்தது யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திரவிளை அருகே படியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

இளைஞரிடம் நகை பறிப்பு: 3 போ் கைது

சமூக ஊடகங்களில் போலி தகவல்: கட்சிகள் நீக்க தோ்தல் ஆணையம் கெடு

ஜாதிய தாக்குதலைத் தாண்டி சாதித்த மாணவா் சின்னதுரை

குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT