முகப்பு
திருவண்ணாமலை

அக்ராபாளையத்தில் காளை விடும் திருவிழா

ஆரணியை அடுத்த அக்ராபாளையம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை காளை விடும் திருவிழா நடைபெற்றது.

Updated On : 21 மே, 2018 at 7:43 AM
பகிர்:

ஆரணியை அடுத்த அக்ராபாளையம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை காளை விடும் திருவிழா நடைபெற்றது.
இந்த விழாவில் சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களிலிருந்து காளைகள் கலந்து கொண்டன. இதில், முதலிடம் பிடித்த குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பாபுதஞ்சியம்மாளின் காளைக்கு பரிசாக மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது. 
இரண்டாமிடம் பிடித்த அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த காளைக்கு ஒன்றேகால் பவுன் தங்க நகையும், மூன்றாமிடம் பிடித்த கிருஷ்ணாவரத்தைச் சேர்ந்த டானின் காளைக்கு ஒரு பவுன் தங்க சங்கிலியும் பரிசாக வழங்கப்பட்டன.
விழாவைக் காண சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் திரண்டிருந்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவைச் சேர்ந்த உழவர் பாதுகாப்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் அ.கருணாகரன், எஸ்.எஸ்.அன்பழகன், லட்சுமணன், முனுசாமி உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.