முகப்பு
திருவண்ணாமலை

துரிஞ்சாபுரம், தச்சம்பட்டு உள் வட்டங்களுக்கான ஜமாபந்தி

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற துரிஞ்சாபுரம், தச்சம்பட்டு உள் வட்டங்களுக்கான ஜமாபந்தியில் 315 மனுக்கள் வரப் பெற்றன.

Updated On : 22 மே, 2018 at 12:49 AM
பகிர்:

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற துரிஞ்சாபுரம், தச்சம்பட்டு உள் வட்டங்களுக்கான ஜமாபந்தியில் 315 மனுக்கள் வரப் பெற்றன.
திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நிகழாண்டுக்கான ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. 3-ஆவது நாளான திங்கள்கிழமை மாவட்ட வருவாய் அலுவலர் (ஜமாபந்தி அலுவலர்)
பொ.ரத்தினசாமி தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது.
இதில், துரிஞ்சாபுரம், சொரந்தை, களஸ்தம்பாடி, சடையனோடை, மல்லவாடி, ஊசாம்பாடி, சானானந்தல், முனியந்தல், இனாம்காரியந்தல், காட்டாம்பூண்டி, பாவுப்பட்டு, சின்னகல்லபாடி உள்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வருவாய்த் துறை தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய 315 மனுக்களை அளித்தனர்.
ஜமாபந்தியில் திருவண்ணாமலை வட்டாட்சியர் கு.மனோகரன், வட்ட வழங்கல் அலுவலர் ஆர்.முருகன், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் டி.ரமேஷ்குமார், தனி வட்டாட்சியர்
இர.ரவி உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.