பெண் தற்கொலை
வேட்டவலத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வேட்டவலத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வேட்டவலம், பூரிகாரன் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி சிவசக்தி (43). குடும்பத் தகராறு காரணமாக கணவரை விட்டுப் பிரிந்திருந்த இவர், தாய் வீட்டில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு அண்மைக் காலமாக தீராத வயிற்று வலி இருந்து வந்ததாம்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வயிற்று வலி அதிகமானதால் மனமுடைந்த அவர், வீட்டில் இருந்த பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்து மயங்கி விழுந்தாராம். உறவினர்கள் அவரை மீட்டு, வேட்டவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் இறந்தார்.