வனத் துறை சார்பில் வினாடி- வினா
சர்வதேச உயிர்பன்மப் பாதுகாப்பு தினத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட வனத் துறை அலுவலகத்தில் வினாடி - வினா போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
சர்வதேச உயிர்பன்மப் பாதுகாப்பு தினத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட வனத் துறை அலுவலகத்தில் வினாடி - வினா போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழக வனத் துறை சார்பில், ஆண்டுதோறும் மே 22-ஆம் தேதி உயிர்பன்மப் பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
அதன்படி, சனிக்கிழமை திருவண்ணாமலை, சின்னக்கடைத் தெருவில் உள்ள மாவட்ட வனத் துறை அலுவலகத்தில் உயிர்பன்மப் பாதுகாப்பு குறித்த வினாடி - வினா போட்டி நடைபெற்றது.
மாவட்ட வன அலுவலர் அர்ச்சனா கல்யாணி தலைமை வகித்தார். பள்ளி மாணவ, மாணவிகள், வனத் துறை ஊழியர்கள், பொதுமக்கள் பலர் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு வரும் செவ்வாய்க்கிழமை (மே 22) நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படுகின்றன.