திருவண்ணாமலை

பைக் மீது கார் மோதல்: ஓட்டுநர் சாவு

DIN

குடியாத்தம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் ஓட்டுநர் இறந்தார்.
குடியாத்தம் பிச்சனூரைச் சேர்ந்தவர் முரளி (34), கள்ளூரைச் சேர்ந்தவர் மணி (30). இருவரும் லாரி ஓட்டுநர்கள். வெள்ளிக்கிழமை இருவரும் பைக்கில் பலமநேருக்குச் சென்றனர். அப்போது, காத்தாடிகுப்பம் அருகே வந்தபோது, எதிரே ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த கார் பைக் மீது மோதியது. இதில் முரளி நிகழ்விடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த மணி குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து குடியாத்தம் கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்து தப்பியோடியவர்களைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT