திருவண்ணாமலை

மனைவியின் கையை வெட்டிய கணவர் கைது

DIN

ஆரணி அருகே குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியின் கையை துண்டாக வெட்டிய கணவரை போலீஸார் கைது செய்தனர்.
 ஆரணியை அடுத்த பையூரைச் சேர்ந்தவர் நவீன்குமார் (39). இவர், செய்யாறு நகராட்சி அலுவலகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அம்மு (32). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
 நவீன்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், அம்மு 2 மகன்களையும் அழைத்துக்கொண்டு இரும்பேட்டில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இந்த நிலையில், மாமியார் வீட்டுக்கு புதன்கிழமை சென்ற நவீன்குமார், மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அதற்கு, அம்மு மறுத்ததால், அவரது தலை, கைப் பகுதிகளில் நவீன்குமார் கத்தியால் வெட்டினாராம். இதில், அம்முவின் கை இரண்டு துண்டானது. இதையடுத்து, நவீன்குமார் தப்பியோடிவிட்டார்.
 அம்முவின் அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், தீவிரச் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அம்மு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஆரணி கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்ததுடன், நவீன்குமாரை வியாழக்கிழமை கைது செய்தனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT