திருவண்ணாமலை

செய்யாறில் பழங்கால நாணயங்கள் கண்காட்சி

DIN


செய்யாறு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பழங்கால நாணயங்கள், தபால் தலைகள், ரூபாய் நோட்டுகளின் கண்காட்சி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.
சனிக்கிழமை நடைபெற்ற கண்காட்சி தொடக்க நிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்கத் தலைவர் தெய்வ.பொற்பாதம் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தார்.
லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் நந்தகோபால் கண்காட்சியை திறந்து வைத்தார். இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயகுமார், பழங்கால நாணயங்கள், தபால் தலைகள், ரூபாய் நோட்டுகள் மற்றும் அரிய வகை புகைப்படங்களை சேகரித்து கண்காட்சிக்கு ஏற்பாடு செய்த சுந்தரமூர்த்தியை பாராட்டினார்.
இந்தக் கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பலர் பார்வையிட்டனர். மாவட்ட முன்னாள் ஆளுநர் ரத்தின.நடராஜன், தொழிலதிபர் காளத்தி, மாவட்டத் தலைவர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

SCROLL FOR NEXT