முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு
வேட்டவலம், செங்கம் பகுதிகளில் அமைந்துள்ள முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வேட்டவலம், செங்கம் பகுதிகளில் அமைந்துள்ள முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வேட்டவலம் மலை மீது அமைந்துள்ள ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில் ஆவணி மாத கிருத்திகை வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, மூலவர் ஸ்ரீமுருகப்பெருமான், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு பல்வேறு பூஜை பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இதில், கலந்து கொண்ட திரளான பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
இதேபோல, செங்கத்தை அடுத்த மண்மலை முருகன் கோயிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை செங்கம் கிருத்திகை வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.