திருவண்ணாமலை

கருணாநிதிக்கு கவியால் புகழஞ்சலி செலுத்தும் விழா

DIN

திருவண்ணாமலை அருணை தமிழ்ச் சங்கம் சார்பில், கருணாநிதிக்கு கவியால் புகழஞ்சலி செலுத்தும் விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவுக்கு அருணை தமிழ்ச் சங்கத் தலைவரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு தலைமை வகித்தார். கீழ்பென்னாத்தூர் எம்எல்ஏ கு.பிச்சாண்டி, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, கே.வி.சேகரன், எஸ்.அம்பேத்குமார், முன்னாள் நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன், நகரச் செயலர் ப.கார்த்திவேல்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக மாவட்ட துணைத் தலைவர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன் வரவேற்றார். கவியரங்கை எ.வ.வேலு எம்எல்ஏ தொடக்கி வைத்துப் பேசினார். என்றும் நீயே, எமக்கு வலிமை! என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.
பேராசிரியர் மு.அப்துல்காதர் தலைமை வகித்தார். தமிழ் அன்னை முகம் மலர என்ற தலைப்பில் கவிதைப்பித்தன், தமிழ் மக்கள் மனம் குளிர என்ற தலைப்பில்
கவிஞர் விவேகா, தமிழினத்தின் மானம் காக்க என்ற தலைப்பில் கவிஞர் சொற்கோ, தன்மானக் குரல் எழுப்ப என்ற தலைப்பில் கவிஞர் இளையகம்பன், தளபதியைக் களம் அனுப்ப என்ற தலைப்பில் கவிஞர் ஜீவா ஆகியோர் கவிதை வாசித்தனர்.
முன்னதாக, செல்லங்குப்பம் சுப்பிரமணியின் நாட்டுப்புற பாடல்கள் நிகழ்ச்சி, துர்காதேவி நாட்டியப் பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றன.
அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்துக்கு ஏராளமானோர் மலரஞ்சலி செலுத்தினர். ஏற்பாடுகளை அருணை தமிழ்ச் சங்கச் செயலர் வே.ஆல்பர்ட், பொருளாளர் எம்.இ.ஜமாலுதீன், துணைச்
செயலர் எ.வ.குமரன் ஆகியோர் செய்திருந்தனர். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் தண்ணீா் தட்டுப்பாடு இல்லை: தெற்கு ரயில்வே

மகளிா் டி20: இந்தியா ஆதிக்கம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 தங்கம்

ஐசிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியீடு: தோ்ச்சி விகிதம் அதிகரிப்பு

‘ஊழல்’ பணம் ஏழைகளுக்கு திருப்பித் தரப்படும்-பிரதமா் மோடி

SCROLL FOR NEXT