திருவண்ணாமலை

மண்டல விளையாட்டுப் போட்டி: ராஜலட்சுமி பாலிடெக்னிக் மாணவர்கள் சிறப்பிடம்

DIN

வேலூர் மண்டல அளவிலான சதுரங்கம், கிரிக்கெட் போட்டிகளில் திருவண்ணாமலை ராஜலட்சுமி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
வேலூர் மண்டல பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான சதுரங்கப் போட்டி குடியாத்தம் ராஜலட்சுமி பாலிடெக்னிக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. 
இதேபோல, வேலூர் மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இவ்விரு போட்டிகளிலும் திருவண்ணாமலை ராஜலட்சுமி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு மண்டல அளவில் மூன்றாம் இடம் பிடித்தனர். போட்டிகளில் வென்ற மாணவர்களை கல்லூரித் தாளாளர் எஸ்.கோவிந்தசாமி புதன்கிழமை பாராட்டி கோப்பை, பாராட்டுச் சான்று வழங்கினார்.
நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் இ.விநாயகம், உடல் கல்வி இயக்குநர் சவுந்தர்ராஜன் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT