திருவண்ணாமலை

ஆரணியில் காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிப்பு

DIN

ஆரணி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் திங்கள்கிழமை நகரில் வார்டு வாரியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
முன்னதாக, புத்திரகாமேட்டீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வேட்பாளர் சுவாமி தரிசனம் செய்தார்.
இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளை கூறி,  நகரில் உள்ள ஆரணிபாளையம், பெரியகடை வீதி, கொசப்பாளையம், அருணகிரிசத்திரம், சூரியகுளம், அம்பேத்கர் நகர், காந்தி நகர், சைதாப்பேட்டை, விஏகே நகர், பள்ளிகூடத் தெரு உள்ளிட்ட 33 வார்டுகளில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரசாரத்தின் போது, முன்னாள் எம்எல்ஏ தயாநிதி, மாவட்ட திமுக செயலர் ஆர்.சிவானந்தம், நகர காங்கிரஸ் செயலர் ஏ.சி.மணி, பொறியாளர் அணியின் மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ்.பாபு, நகர நிர்வாகி கப்பல் கங்காதரன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.பி.அண்ணாமலை, தொகுதிப் பொறுப்பாளர் யு.அருணகிரி, நகரத் தலைவர் ஜெயவேலு உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

SCROLL FOR NEXT