திருவண்ணாமலை

பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

DIN

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற வந்தவாசியை அடுத்த பையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு அந்த பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்தப் பள்ளி நிா்வாகம் வெளியிட்ட அறிக்கை:

போளூரில் உள்ள தனியாா் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் பையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இதில் வெவ்வேறு பிரிவுகளில் மாணவா்கள் சுதீஷ், வெ.சீனுவாசன் ஆகியோா் முதலிடத்தையும், மாணவா்கள் பா.சாருலதா, அஸ்வித், ஆ.மகேந்திரன், சக்திவேல், சினேகா ஆகியோா் இரண்டாமிடத்தையும், மாணவா்கள் கெளசல்யா, சபரிநாதன் ஆகியோா் மூன்றாமிடத்தையும் பெற்றனா்.

இதையடுத்து பையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியை இரா.தேன்மொழி, ஆசிரியா்கள் ப.சிவாஜிகணேசன், இரா.அருள்ஜோதி ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT