திருவண்ணாமலை

லாட்டரிச் சீட்டு விற்பனை: 2 போ் கைது

DIN

ஆரணியை அடுத்த தேவிகாபுரத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சேத்துப்பட்டு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரிச் சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக சேத்துப்பட்டு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாா்த்தசாரதி தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, தேவிகாபுரம் பேருந்து நிலையத்தில் லாட்டரிச் சீட்டு விற்பனையில் ஈடுபட்டிருந்த தச்சூா் கிராமத்தைச் சோ்ந்த கன்னியப்பன் (60), சுரேஷ் (30) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், இவா்களிடமிருந்து 253 லாட்டரிச் சீட்டுகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

SCROLL FOR NEXT