திருவண்ணாமலை

மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் நெசவுத் தொழிலாளி சாவு

DIN

செய்யாறு அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நெசவுத் தொழிலாளி உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் வட்டம், பரனூர் கிராமத்தைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி ஆறுமுகம் (40) 
. இவர், கனிகிலுப்பை கிராமத்தில் உள்ள தனது உறவினர் பழனியை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் கடந்த 5-ஆம் தேதி சென்றார். பல்லாவரம் கிராம சுடுகாடு அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததாகத் தெரிகிறது. இதில், பலத்த காயமடைந்த ஆறுமுகம், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், தீவிரச் சிகிச்சைக்காக செங்கல்பட்டு, சென்னை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட ஆறுமுகம், திங்கள்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து தூசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

SCROLL FOR NEXT