திருவண்ணாமலை

வீர மரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு அஞ்சலி

DIN


ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் உயிரிழந்த 40 சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை மெழுகுவர்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவட்ட நிர்வாகம் சார்பில்...: திருவண்ணாமலை காந்தி சிலை அருகே மாவட்ட நிர்வாகம் சார்பில், வீர மரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்தினர்.
பாஜக சார்பில்...: திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் 16 கால் மண்டபம் எதிரே நகர பாஜக, பாஜகவின் முன்னாள் ராணுவப் பிரிவு சார்பில், சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னாள் ராணுவப் பிரிவுத் தலைவர் கே.சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எஸ்.நேரு, நாடாளுமன்றத் தொகுதி அமைப்பாளர் ஜம்புகுமார் ஜெயின், மாவட்ட பொதுச் செயலர்கள் பாலசுப்பிரமணி, ஜீவா, மாவட்டச் செயலர் பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர், வீர மரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் ஆன்மா சாந்தியடைய பாஜகவினர் மெளன அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, பயங்கரவாதிகளின் கொடுஞ்செயலைக் கண்டித்து, பாஜகவினர் முழக்கங்களை எழுப்பினர். இதில், மாவட்ட துணைத் தலைவர் இறை.மாணிக்கம், நகரத் தலைவர் பி.செந்தில்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில்...: திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் கோயில் சிவாச்சாரியார்கள், கோயில் ஊழியர்கள் சேர்ந்து கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள கொடிமரம் எதிரே மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டனர்.
வேட்டவலத்தில்...: வேட்டவலம் ரதம் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற மெளன அஞ்சலி நிகழ்ச்சிக்கு சேவா சங்கத் தலைவர் வெ.ரோகிந்த் தலைமை வகித்தார். தீபம் சேவா சங்கச் செயலர் ஏ.கார்த்திகேயன், ரதம் சேவா சங்கச் செயலர் ஹரிஹரசுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேட்டவலம் கடை வீதியில் உள்ள காவல் நிலையம் எதிரே திரண்ட பல்வேறு அமைப்பினர் காஷ்மீரில் வீர மரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, மெழுவர்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தினர்.
இதில், ரதம் சேவா சங்கப் பொருளாளர் பிரபு, துணைத் தலைவர் மூர்த்தி, துணைச் செயலர்கள் ராமு, வீரப்பன், சந்துரு, துளசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆரணி: ஆரணி அண்ணா சிலை அருகில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் வீரமரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் உருவப் படத்துக்கு இந்து முன்னணி சார்பில், மரலஞ்சலி, மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில், இந்து முன்னணி நகரத் தலைவர் தாமோதரன், நகர நிர்வாகிகள் நாகராஜன், பாலாஜி, குண்ணத்தூர் நிர்வாகி பாலாஜி, பாஜகவைச் சேர்ந்த வேலு, கோவிந்தராஜ், கோபால், தரணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல, செங்கத்தில் உதவிச் செயற்பொறியாளர் இளங்கோவன் தலைமையில், மின் வாரிய ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

பெயா்ப் பலகை வைப்பதில் மோதல்: 1 மணி நேரம்போக்குவரத்து பாதிப்பு

காா் விபத்தில் தந்தை உயிரிழப்பு: மகள் காயம்

வாக்கு மைய கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடு: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT