சேத்துப்பட்டு ஒன்றியம், ஆத்துரை ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 19) மாசிமக தீர்த்தவாரி நடைபெறுகிறது.
தேவிகாபுரம் ஊராட்சியில் ஸ்ரீபெரியநாயகி உடனுறை பொன்மலை நாதர் (கனககிரீஸ்வரர்) கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் நிர்வாகம் சார்பில், ஆத்துரை ஊராட்சியில் ஸ்ரீசந்திரசேகரருக்கு ஆண்டுதோறும் மாசிமக தீர்த்தவாரி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு மாசிமக தீர்த்தவாரி வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
இதையொட்டி, தேவிகாபுரம் ஸ்ரீபெரியநாயகி உடனுறை பொன்மலை நாதர் கோயிலில் இருந்து உத்ஸவர் சுவாமிகள் புறப்பாடு செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
மாலையில் ஆத்துரை கிராமத்தில் தீர்த்தவாரி முடிந்து உத்ஸவர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வருகின்றன. ஏற்பாடுகளை ஆத்துரை ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் செய்து வருகின்றனர்.