திருவண்ணாமலை

பள்ளியில் முப்பெரும் விழா

DIN

வந்தவாசியை அடுத்த தெள்ளாறில் உள்ள ஆக்ஸ்போர்டு பள்ளியில் முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.
இதில், உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் விளையாட்டு விழா, நர்சரி மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா, கலை நிகழ்ச்சிகள் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றன.
பள்ளி அறக்கட்டளை தாளாளர் டி.டி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அறக்கட்டளை தலைவர் லட்சுமி சுப்பிரமணியன், செயலர் எஸ்.ராமநாதன், இயக்குநர் சாந்தி செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தார். உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் எ.செல்வம் வரவேற்றார்.
  பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வி.தங்கராஜ் சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து, அவர் நர்சரி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.   விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கும் தொழிலதிபர் எஸ்.செல்வகுமார், மருத்துவர்கள் எழிலன், குமார் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். நர்சரி பள்ளி முதல்வர் பழனி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

ஒரு சிறிய காதல் கதை..!

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

SCROLL FOR NEXT