திருவண்ணாமலை

கையெழுத்துப் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

DIN

மாவட்ட அளவிலான தமிழ், ஆங்கில கையெழுத்துப் போட்டியில் 2-ஆம் இடம் பிடித்த செங்கத்தை அடுத்த முறையாறு நிவேதிதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் சான்று வழங்கிப் பாராட்டினார்.
திருவண்ணாமலை மாவட்ட அளவிலான தமிழ், ஆங்கில கையெழுத்துப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், செங்கத்தை அடுத்த முறையாறு நிவேதிதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 6-ஆம் வகுப்பு மாணவிகள் வைஸ்ணவி ஆங்கிலத்திலும், திவ்யா தமிழிலும் மாவட்ட அளவில் 2-ஆம் இடம் பெற்றனர்.
இந்த மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சான்று வழங்கிப் பாராட்டினார். அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார்  உள்பட கல்வி அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதைத் தொடர்ந்து மாணவிகளுக்கு நிவேதிதா பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT