திருவண்ணாமலை

எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

DIN

கீழ்பென்னாத்தூர் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக சார்பில், எம்ஜிஆரின் 102-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு கீழ்பென்னாத்தூர் ஒன்றியச் செயலர் ஆர்.பாஷ்யம் தலைமை வகித்தார். மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணிச் செயலர் சி.தொப்பளான், ஒன்றிய பேரவைச் செயலர் எஸ்.தட்சிணாமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கே.பி.கே.சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துரிஞ்சாபுரம் ஒன்றியச் செயலர் ஏ.கே.ஆர்.ஜெயப்பிரகாஷ் வரவேற்றார்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான தூசி கே.மோகன், மாநில பேரவை துணைச் செயலரும், வழக்குரைஞருமான கே.பாலகுமார், தலைமைக் கழகப் பேச்சாளர் வடபழனி எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில், தமிழக முன்னாள் அமைச்சர்கள் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, முக்கூர் என்.சுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.அரங்கநாதன், ஒன்றிய துணைச் செயலர் எம்.ஆறுமுகம், நகரச் செயலர்கள் ஓ.சி.முருகன் (கீழ்பென்னாத்தூர்), கே.செல்வமணி (வேட்டவலம்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT