இடி தாக்கியதில் செங்கம் ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயிலின் கோபுரம் சேதமடைந்தது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது அதில், செங்கம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில் கோபுரத்தில் இடிதாக்கி அதில் இருந்த சிலைகள் சேதமடைந்தன. மேலும், கோபுரத்தின் உச்சியில் இருந்து கருகிய நிலையில் கற்கள் விழுந்தன.
இதைத் தொடர்ந்து சனிக்கிழமை காலை கோயிலில் சிறப்புப் பூஜை நடைபெற்றது. கோயிலுக்கு வந்த பக்தர்கள் இடி தாக்கிய கோபுரத்தை பார்வையிட்டு சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.