திருவண்ணாமலை

மாரியம்மன் கோயிலில்  கூழ்வார்த்தல் விழா

DIN

போளூர் காவலர் குடியிருப்பில் அமைந்துள்ள ஸ்ரீமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை கூழ்வார்த்தல் விழா நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் காவலர்கள் மே மாதம் கடைசி வாரத்தில் கூழ்வார்த்தல் திருவிழா நடத்துவது வழக்கம். அதேபோல, நிகழாண்டு கடந்த செவ்வாய்க்கிழமை கூழ்வார்த்தல் விழா தொடங்கியது. இதையொட்டி, பக்தர்கள் காப்புகட்டி விரதமிருந்து பூங்கரகம் எடுத்துச் சென்று வழிபட்டனர்.
இதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், மலர் அலங்காரம் நடைபெற்றன. பிற்பகல் ஒரு மணிக்கு கூழ்வார்க்கப்பட்டு மாரியம்மனுக்கு படைக்கப்பட்டது. பின்னர், மாரியம்மன் வீதியுலா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை 
வழிபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

SCROLL FOR NEXT