திருவண்ணாமலை

இரு சக்கர வாகனம் மீது லாரி மோதல்: வியாபாரி பலி

DIN

செங்கம் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஆட்டு வியாபாரி பலியானார்.
 செங்கத்தை அடுத்த சந்தகவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டு வியாபாரி ஏழுமலை (55). இவர் இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை காயம்பட்டு கூட்டுச் சாலையில் வந்தபோது, பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற லாரி இருசக்கர வாகனம் மீது மோதியதாகத் தெரிகிறது.
 இதில், இருசக்கர வானம் சிறிது தொலைவு இழுத்துச் செல்லப்பட்டது. விபத்தில் சிக்கிய ஏழுமலை உடல் நசுங்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது.
 இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து லாரியை நிறுத்தினர். பின்னர், உடனடியாக செங்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
 போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஏழுமலையின் உடலை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT