திருவண்ணாமலை

2 வீடுகளில் புகுந்து நகை, பணம் திருட்டு

DIN

திருவண்ணாமலை அருகே ஒரே நாளில் 2 வீடுகளில் புகுந்து 4 பவுன் தங்க நகைகள், ரூ.57 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
 திருவண்ணாமலையை அடுத்த பரையம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வெங்கடேசன் (35). இவர், திங்கள்கிழமை தண்டராம்பட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார். வீட்டில் அவரது தாய் சிவகாமி (57) மட்டும் தனியே இருந்துள்ளார். செவ்வாய்க்கிழமை காலை சிவகாமி தூக்கத்தில் இருந்து எழுந்தபோது வீட்டின் பின்பக்கக் கதவு திறந்து கிடந்ததாம். மேலும், வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு 4 பவுன் தங்க நகைகள், 250 கிராம் வெள்ளி, ரூ.7 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டு இருந்ததாம்.
 மற்றொரு திருட்டு: வெங்கடேசன் வீட்டின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் விவசாயி முருகன் (47). இவரது வீட்டிலும் திங்கள்கிழமை நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த வெள்ளிப் பொருள்கள், ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றுள்ளனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT