திருவண்ணாமலை

கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு

DIN

சேத்துப்பட்டு திவ்யா கல்வியியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரித் தாளாளர் பா.செல்வராசன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ரமேஷ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மண்டல தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பாதுகாப்பு, பயிற்சி பிரிவில் பணியாற்றும் உதவிப் பொறியாளர் ஜீவானந்தம் கலந்துகொண்டு பேசியதாவது: நேர மேலாண்மை, சாலை விதிகளை கடைப்பிடிக்காததால் அதிகளவில் வாகன விபத்துகள் நிகழ்கின்றன. எனவே, பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் சாலை விதிகளையும், குறியீடுகளையும் பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும் என்றார். மேலும், சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு விடியோக்களும் திரையிடப்பட்டன. இதில், கல்லூரிப் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

சாத்தான்குளம், தட்டாா்மடம், முதலூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

SCROLL FOR NEXT