ஆரணியை அடுத்த இராமசாணிக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை வியாழக்கிழமை நடைபெற்றது.
இராமசாணிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 5-ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெற்றதில், வியாழக்கிழமை 8 மாணவர்கள் சேர்க்கப்பட்டதாக பள்ளித் தலைமை ஆசிரியை ஆர்.தாமரைச்செல்வி தெரிவித்தார்.
ஆசிரியர்கள் சி.சுமதி, என்.நதியா, தினகரன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் உதயகுமாரன், சமூக ஆர்வலர் கே.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.