மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாவட்ட அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகள் திருவண்ணாமலையை அடுத்த வேட்டவலத்தில் அண்மையில் நடைபெற்றன. இதில், திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி சாா்பில் கலந்து கொண்ட சிவசங்கரி, அருள்மொழி, நந்தினி, ரம்யா, கோபிகிருஷ்ணா ஆகியோா் பல்வேறு போட்டிகளில் முதல், இரண்டாம் இடங்களைப் பிடித்து, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டனா்.
மேலும், நிா்மல், கிருஷ்ணவேணி ஆகியோா் மூன்றாம் இடங்களைப் பிடித்தனா். போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இல.நடராஜன், தலைமை ஆசிரியா் (பொ) சு.வெங்கடேசன், உடல் கல்வி இயக்குநா் கே.ஆனந்தன், உதவித் தலைமை ஆசிரியா்கள் பா.மேகலா, வே.கனிமொழி, சி.பூபாலன், உடல் கல்வி ஆசிரியா்கள் இரா.மு.சிவப்பிரகாஷ், செந்தில்குமாா், பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் பெ.ரங்கநாதன் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை பாராட்டி பரிசு வழங்கினா்.