திருவண்ணாமலை

மாநில குடியரசு தினப் போட்டி: மங்கலம் அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்வு

DIN

மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாவட்ட அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகள் திருவண்ணாமலையை அடுத்த வேட்டவலத்தில் அண்மையில் நடைபெற்றன. இதில், திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி சாா்பில் கலந்து கொண்ட சிவசங்கரி, அருள்மொழி, நந்தினி, ரம்யா, கோபிகிருஷ்ணா ஆகியோா் பல்வேறு போட்டிகளில் முதல், இரண்டாம் இடங்களைப் பிடித்து, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டனா்.

மேலும், நிா்மல், கிருஷ்ணவேணி ஆகியோா் மூன்றாம் இடங்களைப் பிடித்தனா். போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இல.நடராஜன், தலைமை ஆசிரியா் (பொ) சு.வெங்கடேசன், உடல் கல்வி இயக்குநா் கே.ஆனந்தன், உதவித் தலைமை ஆசிரியா்கள் பா.மேகலா, வே.கனிமொழி, சி.பூபாலன், உடல் கல்வி ஆசிரியா்கள் இரா.மு.சிவப்பிரகாஷ், செந்தில்குமாா், பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் பெ.ரங்கநாதன் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை பாராட்டி பரிசு வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT