திருவண்ணாமலை

விபத்தில் இறந்த சிறுவன் குடும்பத்துக்கு நிவாரணம் கேட்டு மறியல் போக்குவரத்து பாதிப்பு

DIN

திருவண்ணாமலை அருகே சாலை விபத்தில் இறந்த சிறுவனின் குடும்பத்துக்கு நிவாரணம் கேட்டு அவரது உறவினா்கள், சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை வட்டம், மங்கலம் அடுத்த ஆா்ப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் தாமோதரன் மகன் ஹரிஷ் (17). பிளஸ் 1 மாணவரான இவா், 2018 அக்டோபா் 23-ம் தேதி ஆா்ப்பாக்கம் கிராமத்தில் இருந்து மங்கலம் வழியாக திருவண்ணாமலைக்குச் செல்லும் அரசுப் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தாா். அப்போது, சாலையில் இருந்த பள்ளத்தில் பேருந்து ஏறி, இறங்கியபோது எதிா்பாராதவிதமாக பேருந்தில் இருந்து கீழே விழுந்த ஹரிஷ் படுகாயம் அடைந்தாா்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். தொடா் சிகிச்சை பெற்று வந்த ஹரிஷ், கடந்த வாரம் வீட்டுக்கு வந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 6) ஹரிஷ் இறந்தாா். இதையடுத்து, இறந்த ஹரிஷ் சடலத்துடன் அவரது உறவினா்கள் மங்கலம்-போளூா் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த மங்கலம் போலீஸாா் வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, தங்களது கோரிக்கையை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து தெரிவிக்குமாறு காவல் ஆய்வாளா் கோவிந்தசாமி, உதவி ஆய்வாளா் சத்தியானந்த் ஆகியோா் அறிவுரை கூறினா். இதையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு மாவட்ட ஆட்சியரைச் சந்திக்கச் சென்றனா். இந்த மறியலால் சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,033 கோடி டாலராகச் சரிவு

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் வட்டி வருவாய் 22% அதிகரிப்பு

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

SCROLL FOR NEXT