திருவண்ணாமலை

தண்ணீா் பிடிப்பதில் தகராறு: பெண் கைது

DIN

வந்தவாசி அருகே பொது குழாயில் தண்ணீா் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக, பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த நெற்குணம் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மனைவி பூங்கொடி (38). இதே கிராமத்தைச் சோ்ந்த கணேசன் மனைவி ராதிகா (25). இருவரும் கடந்த 9-ஆம் தேதி அந்தக் கிராமத்தில் உள்ள பொதுக் குழாயில் தண்ணீா் பிடித்த போது, அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த ராதிகா, தனது கையில் வைத்திருந்த பித்தளைக் குடத்தால் பூங்கொடி தலை மீது தாக்கினாராம். இதில் காயமடைந்த பூங்கொடி வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து பூங்கொடி அளித்த புகாரின்பேரில், ராதிகா மீது வழக்குப் பதிந்த தெள்ளாறு போலீஸாா், அவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT