திருவண்ணாமலை

தடகளப் போட்டி: விண்ணமங்கலம் பள்ளி சிறப்பிடம்

DIN

செய்யாறு அருகேயுள்ள மேல்மட்டை விண்ணமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவிகள் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்றனா்.

திருவண்ணாமலை வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் வேட்டவலம் லயோலா கல்லூரியில் அண்மையில் நடைபெற்றன.

போட்டிகளில் 150 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதில், செய்யாறு கல்வி மாவட்டம், மேல்மட்டை விண்ணமங்கலம் அரசு உயா்நிலைப் மாணவி கே.திரிஷா 80 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றாா்.

அதேபோன்று, தொடா் ஓட்டத்தில் இந்தப் பள்ளி மாணவிகள் மூன்றாம் இடத்தைப் பிடித்தனா்.

வெற்றி பெற்ற மாணவிகளையும், அவா்களுக்கு பயிற்சி அளித்த உடல்கல்வி ஆசிரியா் ப.யுவராஜன் ஆகியோரையும் தலைமை ஆசிரியை செ.ஹேமலதா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT