திருவண்ணாமலை

விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

DIN

திருவண்ணாமலை வட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வென்ற திருவண்ணாமலை எஸ்.முருகையன் நினைவு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை பாராட்டப்பட்டனர்.
திருவண்ணாமலை வட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. 
இதில், 14 வயதுக்கு உள்பட்டோருக்கான கைப்பந்துப் போட்டியில் திருவண்ணாமலை எஸ்.முருகையன் நினைவு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இரண்டாமிடமும், 19 வயதுக்கு உள்பட்டோருக்கான கைப்பந்துப் போட்டியில் இந்தப் பள்ளி மாணவர்கள் இரண்டாமிடமும் பிடித்தனர்.
மேலும், 17 வயதுக்கு உள்பட்டோருக்கான கால்பந்துப் போட்டியில் இந்தப் பள்ளி மாணவர்கள் இரண்டாமிடம் பிடித்தனர்.
போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளை பள்ளி அறக்கட்டளைத் தலைவர் சீனி.கார்த்திகேயன், பள்ளிச் செயலரும், தாளாளருமான அருள்விழி கார்த்திகேயன், நிர்வாக இயக்குநர் காயத்ரி, தலைமை ஆசிரியர் ஆனந்தன், இடைநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜேஷ் உள்ளிட்டோர் வியாழக்கிழமை பாராட்டிப் பரிசு வழங்கினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

SCROLL FOR NEXT