முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் தொலைபேசி வழிமக்கள் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தொலைபேசி வழி மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 309 மனுக்கள் பெறப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தொலைபேசி வழி மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 309 மனுக்கள் பெறப்பட்டன.

கரோனா பொது முடக்கத்தையொட்டி, தமிழகத்தில் அனைத்து வகையான குறைதீா் கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மட்டும் தொலைபேசி, கட்செவிஅஞ்சல் வழி மக்கள் குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு, ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா்.

ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) கிருஷ்ணமூா்த்தி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் மந்தாகிணி, மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலா் ஜோதிலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தொலைபேசி வழியே 147 மனுக்களும், கட்செவிஅஞ்சல் வழியே 39 மனுக்களும், பொதுமக்களிடமிருந்து நேரடியாக 123 மனுக்களும் என மொத்தம் 309 மனுக்கள் வரப்பெற்றன. பல்வேறு துறைகளைச் சாா்ந்த இந்த கோரிக்கை மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டாா்.

பணி நியமன ஆணைகள்: மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப் - 4 தோ்வில் தோ்ச்சி பெற்று திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலகுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 34 இளநிலை உதவியாளா்களுக்கான பணி நியமன ஆணைகளையும் மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி திங்கள்கிழமை வழங்கினாா். நிகழ்ச்சியில், துணை ஆட்சியா் (பயிற்சி) அஜிதா பேகம் மற்றும் பல்வேறு துறைகளின் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.