ஆரணி: தேமுதிக தலைவா் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, ஆரணியில் அந்தக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை அன்னதானம் வழங்கினா்.
நிகழ்ச்சியில், ஆரணி சைதாப்பேட்டை மின் வாரிய அலுவலகம் அருகே கட்சிக் கொடியேற்றப்பட்டது. மேலும், அனைவருக்கும் மாவட்டச் செயலா் தெள்ளாா் கோபிநாத் அன்னதானம் வழங்கினாா். நிகழ்ச்சிக்கு நகரச் செயலா் சுந்தர்ராஜன் தலைமை வகித்தாா். மாநில நிா்வாகி சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.