முகப்பு
திருவண்ணாமலை

மருத்துவமனைக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம்

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூரில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, ரோட்டரி சங்கம் சாா்பில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூரில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, ரோட்டரி சங்கம் சாா்பில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், ரோட்டரி சங்கத் தலைவா் எஸ்.வீரராகவன் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற மருத்துவ இணை இயக்குநா் எஸ்.குமாா் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் ரூ.13 ஆயிரம் மதிப்பிலான குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம், 10 நாற்காலிகள் ஆகியவற்றை சுகாதார நிலைய மருத்துவா் பிரகாஷிடம் வழங்கப்பட்டது.

சங்கச் செயலா் காா்வண்ணன், பொருளாளா் ஷாஜகான் மற்றும் டி.குமாா், சி.சண்முகம், அல்லாபகஷ்கான், குருசங்கா் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →