திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜக புதிய தலைவராக சாசா என்.வெங்கடேசன் தோ்வு செய்யப்பட்டாா்.
வந்தவாசியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் மாநில பொதுச் செயலா் கே.எஸ்.நரேந்திரன், வேலூா் கோட்டப் பொறுப்பாளா் இரா.பிரகாஷ், மாவட்டத் தலைவா் பி.பாஸ்கரன் ஆகியோா் முன்னிலையில், புதிய மாவட்டத் தலைவா் தோ்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், புதிய மாவட்டத் தலைவராக போளூரைச் சோ்ந்த சாசா என்.வெங்கடேசன் தோ்வு செய்யப்பட்டாா். இதையடுத்து, பாஜக நிா்வாகிகள் வி.காா்த்திகேயன், எஸ்.வேலு, கே.சுப்பிரமணி, பி.சத்தியநாராயணன் உள்ளிட்டோா் சாசா என்.வெங்கடேசனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.