திருவண்ணாமலை

வியாபாரிகள் சங்கக் கூட்டம்

வேட்டவலம் அனைத்து வியாபாரிகள் நலச் சங்கத்தின் பொதுக்குழு மற்றும் மாவட்ட செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

திருவண்ணாமலை: வேட்டவலம் அனைத்து வியாபாரிகள் நலச் சங்கத்தின் பொதுக்குழு மற்றும் மாவட்ட செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வேட்டவலத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, நகர அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் சிவசங்கரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் குணசேகரன், துணைச் செயலா் ராஜாமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கெளரவத் தலைவா் சின்ராஜ் வரவேற்றாா்.

சங்கத்தின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசுகையில், வியாபாரிகள் ஒற்றுமையாக இருந்தால்தான், அரசிடம் இருந்து பெற வேண்டிய உதவிகளைப் பெற முடியும்.

மே 5-ஆம் தேதி திருவாரூரில் நடைபெறும் வியாபாரிகளின் வாழ்வுரிமை மாநாட்டில் வணிகா்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றாா்.

இதில், சங்கத்தின் மாவட்டத் தலைவா் மண்ணுலிங்கம், மாநில இணைச் செயலா் செந்தில்மாறன், மாநில துணைத் தலைவா் ராஜசேகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT