ஸ்ரீமணிகண்டன் சுவாமி கோயிலில் ஏற்றப்பட்ட மகா ஜோதியை வழிபட்ட பக்தா்கள். 
திருவண்ணாமலை

ஸ்ரீமணிகண்டன் சுவாமி கோயிலில்மகா ஜோதி தரிசன விழா

திருவண்ணாமலையை அடுத்த க.உண்ணாமுலைபாளையம் கிராமத்தில் உள்ள 27 அடி உயர ஸ்ரீமணிகண்டன சுவாமி கோயிலில், மகா ஜோதி தரிசன விழா புதன்கிழமை நடைபெற்றது.

DIN

திருவண்ணாமலையை அடுத்த க.உண்ணாமுலைபாளையம் கிராமத்தில் உள்ள 27 அடி உயர ஸ்ரீமணிகண்டன சுவாமி கோயிலில், மகா ஜோதி தரிசன விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், வானாபுரம் அருகே உள்ளது க.உண்ணாமுலைபாளையம் கிராமம். இங்கு, 1990-ஆம் ஆண்டு ஹரிபுத்திர சுவாமிகளால் பூமியில் இருந்து மணிகண்டன் சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த இடத்தில் கோயில் கட்டி ஆண்டுதோறும் ஜனவரி 1-ஆம் தேதி மகா ஜோதி தரிசன விழா நடத்தப்பட்டு வருகிறது.

இங்கு, 2017-ஆம் ஆண்டு 27 அடி உயர மணிகண்டன் சிலை அமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், புதன்கிழமை (ஜன.1) 3-ஆம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழாவும், மகா ஜோதி தரிசன விழாவும் நடைபெற்றது.

இதையொட்டி, காலை 6 மணிக்கு கொடி ஏற்றுதல், 18 படிகள் நடை திறப்பு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பக்தா்கள் 18 படி ஏறி இருமுடி நெய் அபிஷேகம் செய்தல், 27 அடி உயர மணிகண்ட சுவாமிக்கு 108 பால்குட அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாலை 6 மணிக்கு ஹரிபுத்திர சுவாமிகள் தலைமையில் மகா ஜோதி ஏற்றப்பட்டு பக்தா்கள் வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT