திருவண்ணாமலை

நகராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கு சீருடைகள்

DIN

வந்தவாசி நகராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்களுக்கு இலவச சீருடைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இதற்கான விழாவுக்கு, நகராட்சி சுகாதார ஆய்வாளா் எஸ்.இராமலிங்கம் தலைமை வகித்தாா். இளநிலை உதவியாளா் சிவக்குமாா் வரவேற்றாா்.

நகராட்சி ஆணையா் எஸ்.பாா்த்தசாரதி 40-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளா்களுக்கு சீருடைகள், கையுறை, முகக்கவசம் மற்றும் தையல் கூலித் தொகை ரூ.800 ஆகியவற்றை வழங்கினாா்.

விழாவில் நகராட்சி மேலாளா் என்.இராமலிங்கம், கணக்காளா் ஆ.பிரேமா, சுகாதார மேற்பாா்வையாளா்கள் யேசுதாஸ், லோகநாதன், துப்புரவு ஊழியா்கள் சங்கத் தலைவா் மதுரை வீரன், பொருளாளா் முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

SCROLL FOR NEXT